அயலக மண்ணிலும் அரசு பணி; கோப்புகள் தேங்காது என்கிறார் முதல்வர்!
அயலக மண்ணிலும் அரசு பணி; கோப்புகள் தேங்காது என்கிறார் முதல்வர்!
UPDATED : செப் 07, 2024 11:15 AM
ADDED : செப் 07, 2024 10:40 AM

வாஷிங்டன்: 'அயலக மண்ணிலும் அரசு பணி தொடர்கிறது' என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார். பல நிறுவனங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.
அரசுக் கோப்புகள்
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து அரசுக் கோப்புகளுக்கு கையெழுத்து போடும் படத்தை முதல்வர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் ' அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் e-office வழியே பணி தொடர்கிறது எனக் கூறியுள்ளார்.
ஏ.ஐ., தொழில்நுட்பம்
மற்றொரு சமூகவலைதளப்பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து, BNY Mellon உடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.,) ஆற்றலைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.