'கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல': அமெரிக்காவுக்கு எதிராக பேரணி
'கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல': அமெரிக்காவுக்கு எதிராக பேரணி
UPDATED : ஜன 19, 2026 07:06 AM
ADDED : ஜன 19, 2026 04:35 AM

நுாக்: 'கிரீன்லாந்து விற்பனைக்கல்ல' என்ற முழக்கத்துடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிராக, அந்நாட்டின் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி நடத்தினர்.
ஆர்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது, உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து. ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியான இது, தன்னாட்சி அதிகாரம் பெற்றது. பாதுகாப்பு காரணங்களை கூறி, ஏதேனும் ஒரு வழியில் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அத்தீவு நாட்டில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஒருங்கிணைந்த போராட்டத்தை அந்நாட்டு மக்கள் மேற்கொண்டுள்ளனர். கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களும் பனி பொழிவையும், குளிரையும் பொருட்படுத்தாது, பனி நிரம்பிய வீதிகளில் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, தேசிய கொடிகளை ஏந்தி, 'கிரீன்லாந்து விற்பனைக்கல்ல' என்ற பதாகைகள் உடன் பேரணியாகச் சென்றனர்.
தலைநகர் நுாக்கின் மையப் பகுதியில் துவங்கிய இப்பேரணி, அங்குள்ள அமெரிக்க துாதரகத்தை நோக்கி சென்றது. நுாக்கின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் இப்பேரணியில் பங்கேற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தீவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டமாக இது கருதப்படுகிறது. கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரடெரிக் நீல்சன் இப்பேரணியில் மக்களுடன் இணைந்து பங்கேற்றார்.
இப்போராட்டங்கள் கிரீன்லா ந்தில் மட்டுமின்றி, டென்மார்க்கின் முக்கிய நகரங்களிலும் நடந்தது. டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்கள் ஆ தரவை தெரிவித்தனர்.
தலைநகரில் உள்ள 'சிட்டி ஹால் ஸ்கொயர்' பகுதியில் திரண்ட மக்கள், அமெரிக்க துாதரகத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர். டென்மார்க் கின் முக்கிய நகரங்களான ஆர்கஸ், ஆல்போர்க், ஓடென்ஸ் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன .
கனடாவின் வடக்கு பகுதியில் உள்ள நுனாவுட் மாகாணத்தின் தலைநகரான இகாலுயிட் நகரிலும், கிரீன்லாந்துக்கு ஆதரவாக பேரணி கள் நடத் தப்பட்டன.

