sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வெயில் கொடுமை: சவுதியில் 1,000 பேர் பலி

/

வெயில் கொடுமை: சவுதியில் 1,000 பேர் பலி

வெயில் கொடுமை: சவுதியில் 1,000 பேர் பலி

வெயில் கொடுமை: சவுதியில் 1,000 பேர் பலி

4


ADDED : ஜூன் 24, 2024 12:29 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 12:29 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெக்கா : கடும் வெப்பம் காரணமாக சவுதியில் உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

முஸ்லிம் மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக, ஆண்டுதோறும் மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். இந்தாண்டு, கடந்த 14ம் தேதி இந்த புனித யாத்திரை துவங்கியது.

சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வரும் சூழலில், யாத்திரை வந்தவர்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், கடும் வெப்பத்தால் இந்தியா உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,081 ஹஜ் பயணியர் இறந்தது தெரிய வந்துள்ளது.

இதில், அதிகபட்சமாக எகிப்து நாட்டைச் சேர்ந்த 658 பேர் பலியாகி உள்ளனர். நம் நாட்டைச் சேர்ந்த 98 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பலருக்கு ஏற்கனவே உடல் உபாதைகள் இருந்ததாகவும், வயோதிகம் காரணமாக இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தவிர, கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தடுக்க, சவுதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், சவுதி அரசு தரப்பில் இறந்தவர்களின் விபரத்தை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஹஜ் யாத்திரை வந்தவர்களில் பலர் மாயமாகி உள்ளதால், அவர்களின் நிலை என்னானது என்பது தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனினும், இதுவரை இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.






      Dinamalar
      Follow us