sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தென்கொரியாவில் வெளுத்து வாங்கும் கனமழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு

/

தென்கொரியாவில் வெளுத்து வாங்கும் கனமழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு

தென்கொரியாவில் வெளுத்து வாங்கும் கனமழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு

தென்கொரியாவில் வெளுத்து வாங்கும் கனமழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு

1


ADDED : ஜூலை 20, 2025 09:32 PM

Google News

1

ADDED : ஜூலை 20, 2025 09:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சியோல்: தென் கொரியாவில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்கொரியாவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழை மேலும் நீடிக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கேப்யோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்கள் மூழ்கி, கனமழையின் மத்தியில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் இரண்டு பேர் இறந்தனர். ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்.

மழை தொடங்கியதிலிருந்து 11 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 13 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேப்யோங்கில் ஒரு நிவாரண முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 40 வயது நபர் உயிரிழந்தார் மேலும் 24 பேர் சிக்கித் தவித்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us