sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் ஹெலிகாப்டர் மாயம்: தேடுகிறது இந்தோனேசியா ராணுவம்

/

இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் ஹெலிகாப்டர் மாயம்: தேடுகிறது இந்தோனேசியா ராணுவம்

இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் ஹெலிகாப்டர் மாயம்: தேடுகிறது இந்தோனேசியா ராணுவம்

இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் ஹெலிகாப்டர் மாயம்: தேடுகிறது இந்தோனேசியா ராணுவம்

1


UPDATED : செப் 02, 2025 02:43 PM

ADDED : செப் 02, 2025 01:45 PM

Google News

1

UPDATED : செப் 02, 2025 02:43 PM ADDED : செப் 02, 2025 01:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜகார்த்தா: இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென மாயமாகி உள்ளது. அதை இந்தோனேசியா ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

இந்தோனேசியாவின் தெற்கு கலிமண்டன் மாகாணத்தில் உள்ளது கொடாபாரு மாவட்டம். இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து ஈஸ்ட் இந்தோ ஏர் விமானத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கலிமண்டன் மாகாணம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

அதில் இந்தியர் ஒருவர், அமெரிக்கா, பிரேசில் நாட்டினர் என மொத்தம் 8 பேர் அதில் பயணித்தனர். வானில் பறக்கத் தொடங்கிய 8 நிமிடங்களில் ஹெலிகாப்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, மண்டேவே பகுதியில் உள்ள 27 கிமீ போர்னியோ வனப்பகுதியில் ஹெலிகாப்டரை ராணுவத்தினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தேடுதல் வேட்டையில் உள்ளூர் போலீசாரும் களம் இறங்கி உள்ளனர்.






      Dinamalar
      Follow us