sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆயுதங்களை குறைக்க வேண்டும்; லெபனானை எச்சரிக்கும் இஸ்ரேல்

/

ஆயுதங்களை குறைக்க வேண்டும்; லெபனானை எச்சரிக்கும் இஸ்ரேல்

ஆயுதங்களை குறைக்க வேண்டும்; லெபனானை எச்சரிக்கும் இஸ்ரேல்

ஆயுதங்களை குறைக்க வேண்டும்; லெபனானை எச்சரிக்கும் இஸ்ரேல்

1


ADDED : நவ 02, 2025 04:54 PM

Google News

1

ADDED : நவ 02, 2025 04:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: லெபனானின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை குறைக்க வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இருப்பினும், லெபனானின் தெற்கில் 5 இடங்களில் இஸ்ரேல் தனது படைகளை நிறுத்தியுள்ளது. அங்கிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அண்மையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் படைகள் குவிக்கப்பட்டிருக்கும் லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து ஆயுதங்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் குறைக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாவது; ஹிஸ்புல்லா அமைப்பினர் நெருப்புடன் விளையாடுகின்றனர். லெபனானின் தெற்கில் ஆயுதங்களை குறைக்க வேண்டும். இதனை மீறினால் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் வாழும் மக்களுக்கான அச்சுறுத்தலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், என்று லெபனானை எச்சரித்துள்ளார்.






      Dinamalar
      Follow us