sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஹிந்து துறவிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல்! வங்கதேச வக்கீல்கள் ஆஜராக அச்சம்

/

ஹிந்து துறவிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல்! வங்கதேச வக்கீல்கள் ஆஜராக அச்சம்

ஹிந்து துறவிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல்! வங்கதேச வக்கீல்கள் ஆஜராக அச்சம்

ஹிந்து துறவிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல்! வங்கதேச வக்கீல்கள் ஆஜராக அச்சம்

10


UPDATED : டிச 04, 2024 02:49 PM

ADDED : டிச 04, 2024 01:51 AM

Google News

UPDATED : டிச 04, 2024 02:49 PM ADDED : டிச 04, 2024 01:51 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேசத்தில், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், அவரது ஜாமின் மனு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, 'சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே' என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்புர் என்ற இடத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வங்கதேச தேசிய கொடியை அவர் அவமதித்ததாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அச்சுறுத்தல்


இந்த விவகாரத்தில் சின்மோய் தாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமின் மனு, கடந்த மாதம் 26ல் நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிமன்ற வாயிலில் போலீசாருக்கும், ஹிந்து அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், சைபுல் இஸ்லாம் அலிப் என்ற வழக்கறிஞர் உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து சின்மோய் தாஸ் ஜாமின் மனு, சாட்டோகிராம் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சின்மோய் தாசுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகாததை அடுத்து, விசாரணை அடுத்த மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சின்மோய் தாசுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என்பதற்காக, 70க்கும் மேற்பட்ட ஹிந்து வழக்கறிஞர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே குற்றஞ்சாட்டி உள்ளது.

பாதுகாப்பு இல்லை


இதற்கிடையே, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் துணை தலைவர் ராதாராமன் தாஸ் கூறியதாவது:

சின்மோய் தாசுக்காக ஆஜராக இருந்த வழக்கறிஞர் ராமன் ராய், முஸ்லிம்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவரது வீடு சூறையாடப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் உயிருக்காக போராடி வருகிறார்.

வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் துறவிகள் காவி உடை அணிவதையும், நெற்றியில் சந்தனப் பொட்டு வைப்பதையும் தவிர்க்கவும். உங்கள் பக்தி உணர்வை ரகசியமாக வைத்துக் கொள்வதே இப்போதைக்கு உயிருக்கு பாதுகாப்பானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில், சிறுபான்மையினரான ஹிந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதை, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

வங்கதேசத்தில் இந்திய தேசிய கொடி அவமதிக்கப்பட்டதால், அந்நாட்டில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு திரிபுரா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின் பொது செயலர் சாய்கத் பந்தோபாத்யாய் நேற்று முன்தினம் அறிவித்தார்.

திரிபுராவில் தடை



போலீஸ் மீது நடவடிக்கை

துறவி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஹிந்து சங்கர்ஷ் சமிதியை சேர்ந்த தன்னார்வலர்கள், திரிபுராவில் உள்ள வங்கதேச துணை துாதரகம் முன், நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அப்போது, துணை துாதர் அலுவலகத்துக்குள் ஏழு பேர் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த மூன்று எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி டி.எஸ்.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, வங்கதேசத்தில் உள்ள இந்திய துாதரகத்தின் துாதர் பிரணய் வர்மாவை, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்துக்கு நேரில் வரவழைத்து, திரிபுராவில் துாதரக அலுவலகத்தில் நடந்த பாதுகாப்பு மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us