sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

போரினால் குழந்தைகளுக்கு பேரழிவு: பிரதமர் மோடி கவலை

/

போரினால் குழந்தைகளுக்கு பேரழிவு: பிரதமர் மோடி கவலை

போரினால் குழந்தைகளுக்கு பேரழிவு: பிரதமர் மோடி கவலை

போரினால் குழந்தைகளுக்கு பேரழிவு: பிரதமர் மோடி கவலை

6


UPDATED : ஆக 23, 2024 05:15 PM

ADDED : ஆக 23, 2024 03:06 PM

Google News

UPDATED : ஆக 23, 2024 05:15 PM ADDED : ஆக 23, 2024 03:06 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீவ்: உக்ரைன் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை கட்டியணைத்தும், கைகுலுக்கியும் வரவேற்றார். பிறகு போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள போரில் உயிரிழந்த குழந்தைகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினர்.

வரவேற்பு


போலந்து பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ரயில் மூலம் உக்ரைன் சென்றடைந்தார். அங்கு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர், அங்கு தங்கி உள்ள இந்தியர்கள் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

மரியாதை

பிறகு கீவ் நகரில் உள்ள மஹாத்மா காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். Image 1311644

இது குறித்து அவர் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கீவ் நகரில் மஹாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரின் லட்சியங்கள் உலகளாவியவை மற்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிப்பவை. மனித குலத்துக்கு அவர் காட்டிய வழியை நாம் அனைவரும் பின்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஞ்சலி

Image 1311643இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள போர் நினைவிடத்திற்கு மோடி சென்றார். அங்கு ஏற்கனவே வந்து இருந்த ஜெலன்ஸ்கி, மோடியை கட்டியணைத்தும், கைகுலுக்கியும் வரவேற்றார். தொடர்ந்து, நினைவிடத்தில், போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவாக அஞ்சலி செலுத்தினர். ஜெலன்ஸ்கியின் தோல்களில் கைகளைப் போட்டவாறு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

Image 1311642இது குறித்த புகைப்படங்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: ஜெலன்ஸ்கியுடன் சேர்ந்த போரில் உயிரிழந்த குழந்தைகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். போர், இளம் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளை இழந்த பெற்றோரின் நினைவாக எனது மனம் உள்ளது. இந்த சோகமான நேரத்தில் அவர்களுக்கு தைரியம் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

ஜெலன்ஸ்கி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அனைத்து நாட்டிலும், பாதுகாப்பாக வாழ குழந்தைகளுக்கு உரிமை உள்ளது. இதனை நாம் சாத்தியமாக்க வேண்டும். எனக்கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மோடியும், ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, ரஷ்ய தாக்குதல் குறித்தும், போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் இருவரும் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us