sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

போருக்கு வந்தால் நாலு நாள் கூட தாங்காது! வெடிமருந்து பற்றாக்குறையால் பாக்., பீரங்கி முடங்கும்

/

போருக்கு வந்தால் நாலு நாள் கூட தாங்காது! வெடிமருந்து பற்றாக்குறையால் பாக்., பீரங்கி முடங்கும்

போருக்கு வந்தால் நாலு நாள் கூட தாங்காது! வெடிமருந்து பற்றாக்குறையால் பாக்., பீரங்கி முடங்கும்

போருக்கு வந்தால் நாலு நாள் கூட தாங்காது! வெடிமருந்து பற்றாக்குறையால் பாக்., பீரங்கி முடங்கும்

9


ADDED : மே 04, 2025 05:59 AM

Google News

ADDED : மே 04, 2025 05:59 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகிஸ்தான்,'நானும் போருக்கு போறேன்' என கூறிவிட்டு, ஒரு வேளை இந்தியாவுடன் மோதலுக்கு இறங்கினால், நான்கு நாள் கூட, அதனால் தாக்குப்பிடிக்க முடியாது என சர்வதேச போர் தந்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான நிதி பற்றாக்குறையால் தவிக்கிறது. எந்த ஆட்சியும் முழு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ததில்லை. அடிக்கடி ராணுவ புரட்சிகள் வெடிக்கின்றன. பதவிக்கு வருவோர், இருக்கும் சொத்தை அபகரித்து செல்கின்றனர். இதனால், ஆயுள் காலத்தில் பல நாட்கள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலை உள்ளது. தற்போது, இந்தியாவுடன் போருக்கு தயாராகியுள்ள பாகிஸ்தான், பீரங்கி வெடிமருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போரில், பாகிஸ்தான் எந்த நாட்டுடனும் அணி சேரவில்லை. எனினும், உக்ரைன் நாட்டுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து, தனது போர் தளவாட இருப்புக்களை ஒட்டுமொத்தமாக காலி செய்தது.

பாகிஸ்தான் வெடிமருந்து தொழிற்சாலைகளில், அதிநவீன வசதிகள் இல்லை. பெரிய அளவில் இருப்பு வைக்கும் திறனும் இல்லை. காலாவதியான உற்பத்திப் பொருட்களால், வெடிமருந்து தயாரிப்பும் தேவைக்கு ஏற்ப இல்லை. இதனால் வெடிமருந்து இருப்பு நான்கு நாட்கள் கூட தாக்குப்பிடிக்காது. பாகிஸ்தான் ராணுவம், பீரங்கி படைகளை அதிகம் சார்ந்துள்ளது. ஆனால், பீரங்கிகளுக்கு ஏற்ற தீனி இல்லாமல், யானைப்பசிக்கு சோளப்பொரியாக உள்ளது.






      Dinamalar
      Follow us