sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

குற்றவாளிகளை நாடு கடத்தும் பிரிட்டன் பட்டியலில் இந்தியா

/

குற்றவாளிகளை நாடு கடத்தும் பிரிட்டன் பட்டியலில் இந்தியா

குற்றவாளிகளை நாடு கடத்தும் பிரிட்டன் பட்டியலில் இந்தியா

குற்றவாளிகளை நாடு கடத்தும் பிரிட்டன் பட்டியலில் இந்தியா

5


ADDED : ஆக 12, 2025 03:07 AM

Google News

5

ADDED : ஆக 12, 2025 03:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: அதிகரித்து வரும் குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன், அவர்களின் மேல்முறையீடுகள் விசாரிக்கப்படுவதற்கு முன், அவர்களுடை ய தாயகத்துக்கு நாடு கடத்தப்படும் பட்டியலில், இந்தியாவை பிரிட்டன் அரசு சேர்த்துள்ளது.

புதிய வழிமுறை ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியுள்ள வெளிநாட்டினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேல்முறையீட்டு விசாரணைக்காக அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், பிரிட்டனில் வசிப்ப வர்களின் குடியுரிமை பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டு குற்றவாளிகள், மேல்முறையீட்டு விசாரணையை அவர்களது சொந்த நா ட்டி லேயே மேற்கொள்ள பிரிட்டன் அரசு கடந்த 2023ல் புதிய வழிமுறையை மேற்கொண்டது.

'இப்போது வெளியேறுங்கள்; பின் மேல்முறையீடு செய்யுங்கள்' என்ற திட்டத்தின் கீழ், அப்போதைய கன்சர்வேடிவ் கட்சி உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரவர்மேன், வெளிநாட்டு குற்றவாளிகளை அனுப்பி வைப்பதற்கான நாடுகளின் பட்டியலை உருவாக்கினார்.

இந்த பட்டியலில், பின்லாந்து, நைஜீரியா, எஸ்டோனியா, அல்பேனியா, பெலிஸ், மொரீஷியஸ், தான்சானியா மற்றும் கொசோவோ ஆகிய எட்டு நாடுகள் இடம்பெற்றிருந்தன.

23 நாடுகள் அந்த பட்டியல் தற்போது, 23 நாடுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவும் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளது.

அங்கோலா, ஆஸ்திரேலியா, போட்ஸ்வானா, புருனே, பல்கேரியா, கனடா, கயானா, இந்தோனேஷியா, கென்யா, லாட்வியா, லெபனான், மலேஷியா, உகாண்டா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us