sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் வலுவாக உள்ளது: வெள்ளை மாளிகை

/

இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் வலுவாக உள்ளது: வெள்ளை மாளிகை

இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் வலுவாக உள்ளது: வெள்ளை மாளிகை

இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் வலுவாக உள்ளது: வெள்ளை மாளிகை

8


ADDED : நவ 22, 2024 12:12 PM

Google News

ADDED : நவ 22, 2024 12:12 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அதானி விவகாரம் பூதாகரமான நிலையில், இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான உறவு வலிமையாக உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான திட்டங்களை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெற்றதாகவும், அந்தத் திட்டங்களுக்காக அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாகவும், அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதானிக்கு பிடிவாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிடையே பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிராக பைடன் அரசு பின்னும் சதிவலை என்று ரஷ்ய செய்தி நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அதானி மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் மூலம் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு பாதிக்கப்படுமா? என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அதானி மீதான முறைகேடு புகார் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: அதானி மற்றும் அவரது நிறுவனத்தின் மீதான வழக்கு விவகாரம் குறித்து அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசுக்கு தெரியும். அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணையத்திற்கும், நீதித்துறைக்கும் பரிந்துரை செய்ய வேண்டும்.

இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவாக உள்ளது என்று நம்புகிறோம். உலகளாவிய பிரச்னைகளை தீர்ப்பதில் இருநாட்டு மக்களும், அரசு நிர்வாகங்களும் இணைந்தே உள்ளனர். ஏற்கனவே, உள்ள சிக்கல்களுக்கு தீர்வு கண்டதைப் போல, இந்த விவகாரத்தில் சுமூகமாக தீர்வு காண்போம், எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us