sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

போன் வந்தால் உஷார் ! துபாய் வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

/

போன் வந்தால் உஷார் ! துபாய் வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

போன் வந்தால் உஷார் ! துபாய் வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

போன் வந்தால் உஷார் ! துபாய் வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

3


ADDED : செப் 28, 2024 01:26 PM

Google News

ADDED : செப் 28, 2024 01:26 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்தியர்களை குறிவைத்து பலர் பணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் யாரும் போன் செய்வதில்லை. குறுந்தகவலும் அனுப்புவதில்லை. ஆனால் சிலர் தூதரகத்தில் இருந்து பேசுவதாக யாரும் அழைத்தால் விழிப்போடு இருக்கவும்.

குடியுரிமை, குடிபெயர்ந்தோர் விஷயமாக யாரும் பேசினால் நம்ப வேண்டாம். ஒன்டைம் பாஸ்வேர்டு, பாங்க் விவரம், மற்றும் சொந்த விவரங்களை தெரிவிக்க வேண்டாம். யாரும் பணம் கேட்டால் வழங்க வேண்டாம். இது போன்ற மோசடி அழைப்புகள் வந்தால் Pravasi Bharatiya Sahayata Kendra (PBSK) அமைப்புக்கு புகார் தெரிவிக்கலாம். உதவிக்கான தொலைபேசி எண்: 80046342.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us