sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தானை சேர்ந்த 19 பேர் மீட்பு : இந்திய கடற்படையினர் அதிரடி தொடர்கிறது

/

பாகிஸ்தானை சேர்ந்த 19 பேர் மீட்பு : இந்திய கடற்படையினர் அதிரடி தொடர்கிறது

பாகிஸ்தானை சேர்ந்த 19 பேர் மீட்பு : இந்திய கடற்படையினர் அதிரடி தொடர்கிறது

பாகிஸ்தானை சேர்ந்த 19 பேர் மீட்பு : இந்திய கடற்படையினர் அதிரடி தொடர்கிறது

24


UPDATED : ஜன 30, 2024 11:17 AM

ADDED : ஜன 30, 2024 10:29 AM

Google News

UPDATED : ஜன 30, 2024 11:17 AM ADDED : ஜன 30, 2024 10:29 AM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய பாகிஸ்தானை சேர்ந்த 19 மாலுமிகளை இந்திய கடற்படையினர் இன்று (ஜன-30) மீட்டனர். கடந்த 36 மணி நேரத்தில் இந்திய படையினரின் ஈராக்கை சேர்ந்தவர்கள் 17 பேர் மீட்கப்பட்ட சம்பவம் சாதனையாக போற்றப்படும் வேளையில் இன்றும் இந்திய படையினருக்கு பாராட்டு கிடைத்துள்ளது.

வளைகுடா மற்றும் கிழக்கு சோமாலியா பகுதிகளில் கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சோமாலியா கிழக்கு கடற்கரை பகுதியில், ஈரான் கொடியுடன், 17 பேருடன் மீன்பிடிக் கப்பல் சென்றது. அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர், கப்பலை கடத்தியதுடன், அதிலிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

அவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, நம் கடற் படையின் ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல், சம்பவ இடத்துக்கு விரைந்து, கடற்கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் அதிலிருந்தவர்களை காப்பாற்றினர்.

இன்று சோமாலிய கடற்பகுதி அருகே பாகிஸ்தானை சேர்ந்த அல்நயீமீ என்ற மீன்பிடி கப்பலை வழிமறித்து கொள்ளையடிக்கவும் கப்பலில் இருந்தவர்களை கடத்தவும் முயன்றனர். இத்தகவல் இந்திய கடற்பைடையினருக்கு கிடைத்தது. இதனையடுத்து ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலில் விரைந்து கடற்கொள்ளையர்கள் 11 பேரை துப்பாக்கி முனையில் பிடித்தனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த மாலுமி, மீனவர்கள், மற்றும் ஊழியர்கள் 19 பேரை இந்திய படையினர் மீட்டனர். இத்தகவலை நமது படையினர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us