sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆஸி.,யில் போலீசாரால் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்

/

ஆஸி.,யில் போலீசாரால் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்

ஆஸி.,யில் போலீசாரால் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்

ஆஸி.,யில் போலீசாரால் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்


ADDED : ஜூன் 03, 2025 07:16 PM

Google News

ADDED : ஜூன் 03, 2025 07:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கைது நடவடிக்கையின் போது, போலீசாரின் செயலால் இந்திய வம்சாவளியினரை சேர்ந்த ஒருவர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசித்து வருபவர் கவுரவ்(42).இவரது மனைவி அம்ரித் பால். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடந்த வியான் அன்று, நடுரோட்டில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள், இதனை பார்த்து குடும்ப வன்முறையாக கருதி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவுரவை கைது செய்ய முயன்றனர். அப்போது, அவரை முழங்கால் போட வைத்து, தலை பின்புறம் கையை வைத்து கைது செய்ய முயற்சித்த போது, ' நான் எந்த தவறும் செய்யவில்லை ' என சத்தமாக கூறிய கவுரவ் திடீரென மயங்கி விழுந்தார்.

போலீசார் கூறும் போது, கைது நடவடிக்கையின் போது அதனை தவிர்க்க ஆவேசத்துடன் முயன்று மயங்கி விழுந்ததாக தெரிவித்தனர்.

ஆனால், இதனை படம் பிடித்த மனைவி அம்ரித் பால் கூறுகையில், தனது கணவர் மதுபோதையில் இருந்தார். வன்முறையில் ஈடுபடவில்லை. கார் மீது எனது கணவர் காரை மோதச் செய்தனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து, கவுரவை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதனையடுத்து கவுரவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கவுரவ் மூளையில் காயம் ஏற்பட்டு உள்ளது. கோமா நிலைக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக , சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த ஜாரஜ் பிளாய்ட் என்பவரை அந்நாட்டு போலீசார் கைது செய்ய முயன்ற போது கழுத்து இறுக்கப்பட்டு இறந்த சம்பவத்துடன், இந்திய வம்சாவளியினருக்கு ஏற்பட்ட துயரத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us