தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/சுத்தியலால் தாக்கி இந்திய மாணவர் படுகொலை

சுத்தியலால் தாக்கி இந்திய மாணவர் படுகொலை

சுத்தியலால் தாக்கி இந்திய மாணவர் படுகொலை


ADDED : ஜன 29, 2024 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2024 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நியூயார்க்: ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி, 25, என்ற மாணவர், இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக சென்றார். ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் தங்கியிருந்த அவர், சமீபத்தில், எம்.பி.ஏ., படிப்பை படித்து முடித்தார்.

இதற்கிடையே, லித்தோனியா நகரில் உள்ள கடை ஒன்றில், விவேக் சைனி பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். இங்கு ஏற்கனவே தங்கி பணிபுரியும் ஜூலியன் பால்க்னர் என்பவரிடம், அவர் கடந்த சில நாட்களாக அக்கறையுடன் பழகி வந்தார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி விவேக் சைனி வீட்டிற்குச் செல்லும் போது பின்தொடர்ந்து வந்த ஜூலியன் பால்க்னர், சுத்தியலால் அவரை தாக்கினார். தலையில், 50 முறை தாக்கப்பட்டதில், சம்பவ இடத்திலேயே விவேக் சைனி உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us