sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் வரி: அமெரிக்க மசோதாவால் இந்தியர்கள் பீதி

/

சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் வரி: அமெரிக்க மசோதாவால் இந்தியர்கள் பீதி

சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் வரி: அமெரிக்க மசோதாவால் இந்தியர்கள் பீதி

சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் வரி: அமெரிக்க மசோதாவால் இந்தியர்கள் பீதி

8


UPDATED : மே 18, 2025 08:26 PM

ADDED : மே 18, 2025 01:16 AM

Google News

UPDATED : மே 18, 2025 08:26 PM ADDED : மே 18, 2025 01:16 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால், அதற்கு 5 சதவீதம் வரி விதிக்கும் வகையில், அமெரிக்க பார்லிமென்டில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, இந்தியர்கள் உட்பட அங்கு பணியாற்றும் வெளிநாட்டவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி சார்பில், ஒரு மசோதா அந்த நாட்டின் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பெரிய அழகான மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, அமெரிக்காவில் இருந்து சொந்த நாடுகளுக்கு பணத்தை அனுப்பினால், அதற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

இது, அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை பெரிய அளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் 23 லட்சம் இந்தியர்கள், பல விசாக்கள் வாயிலாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர்.

'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தரமாக தங்குவதற்கான அனுமதி பெற்றவர்கள், எச்1பி உள்ளிட்ட விசா வைத்துள்ள இந்தியர்கள், இனி சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால், 5 சதவீதம் வரியை செலுத்த வேண்டும். இதைத் தவிர, அமெரிக்காவில் வசிக்காத, அதே நேரத்தில் அங்கு செய்துள்ள முதலீடுகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினாலும், இந்த வரி விதிக்கப்படும்.

இந்த மசோதா, அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

5 சதவீதம் என்பது

மிகப்பெரிய சுமைஇம்மசோதா வரும் 26ம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஜூலை 4 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் 45 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில், தென் மாநிலத்தவர் அதிகம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 3.5 லட்சம் பேர்.அமெரிக்காவில் இருந்து சொந்த நாட்டுக்கு பணம் அனுப்புபவர்களில் இந்தியர்களே அதிகம். பல்வேறு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், ஆண்டுக்கு 10 லட்சம் கோடி ரூபாயை சொந்த நாட்டுக்கு அனுப்புகின்றனர். இதில், 2.82 லட்சம் கோடி ரூபாய், அமெரிக்க வாழ் இந்தியர்களால் அனுப்பப்படுகிறது. இது, 27 சதவீதம். வளைகுடா நாடுகளில் இருந்து 19 சதவீதம், பிரிட்டனில் இருந்து 10.4 சதவீதம் வருகிறது.அமெரிக்காவில் வருமான வரி அதிகபட்சம், 35 சதவீதம். மேலும், சொந்த நாட்டுக்கு பணம் அனுப்ப, 5 சதவீதம் வரி என்பது கூடுதல் சுமை. கூடுதல் வரியை தவிர்க்க, உடனடியாக இந்தியாவுக்கு பணம் அனுப்பாமல், சில காலத்துக்கு அங்கேயே சேமித்து வைக்க, அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவெடுக்கக் கூடும். அமெரிக்காவில் பணச் சுழற்சியை அதிகரிக்க, இது போன்ற முடிவை அதிபர் டிரம்ப் எடுத்திருக்கக்கூடும். ஒரு வருமானத்துக்கு இரண்டு இடங்களில் வரி என்பதற்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த 5 சதவீத வரிக்கு, குறைந்தபட்ச வரம்பு ஏதும் குறிப்பிடவில்லை. வருமான வரியில் இருந்து கழித்துக் கொள்ளப்படுமா என்பது குறித்தும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. இந்தியாவில் இது போன்ற வரி இருப்பினும், வரியில் கழித்துக் கொள்ள முடியும். இந்திய அரசு இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புகிறோம்.- கார்த்திகேயன்ஆடிட்டர்








      Dinamalar
      Follow us