sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ரோஹித் கிருஷ்ணா!

/

இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ரோஹித் கிருஷ்ணா!

இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ரோஹித் கிருஷ்ணா!

இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ரோஹித் கிருஷ்ணா!


ADDED : ஆக 14, 2025 08:08 AM

Google News

ADDED : ஆக 14, 2025 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அல்மாட்டி: இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார் ரோகித்.

இந்திய செஸ் வீரர் ரோகித் கிருஷ்ணா 20. தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். கடந்த மார்ச் மாதம் சுவீடனில் நடந்த கிராண்ட் மாஸ்டர் தொடரில் 9 சுற்றில் 6.5 புள்ளி எடுத்தார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான முதல் அந்தஸ்தை எட்டினார். அடுத்து துபாய் ஓபன் தொடரில் 9 சுற்றில் 5.5 புள்ளி எடுக்க, இரண்டாவது அந்தஸ்தை அடைந்தார்.

தற்போது கஜகஸ்தானில் அல்மாட்டியில் மண்டல ஓபன் சர்வதேச செஸ் தொடரில் பங்கேற்றார். இதில் ரோகித் கிருஷ்ணா, கடைசி சுற்றில் (9 வது) ஆர்மேனியாவின் ஆர்தர் தவ்த்யனை வென்றார். 6.0 புள்ளி எடுத்து 8வது இடம் பிடித்தார். தவிர, 'பிடே' தரவரிசையில் 15.1 புள்ளி பெற்றார். இதையடுத்து சர்வதேச தரவரிசையில் மொத்தம் 2500 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்ட, மூன்றாவது அந்தஸ்தை அடைந்தார்.

தற்போது இந்தியாவின் 89 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் ஆதித்யா, 9 சுற்றில் 5 வெற்றி, 5 'டிரா' செய்து, 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.






      Dinamalar
      Follow us