/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
/
பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 01, 2026 04:32 AM
கரூர்: கரூர் அருகே புகழ்பெற்ற கோவில் பகுதியில், நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
க.பரமத்தி பவித்திரம் அருகே பிரசித்தி பெற்ற பாலமலை சுப்பி-ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மேலும், அதே பகுதியில் அரு-கருகே பெருமாள் கோவில், அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. கரூர் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பவுர்ணமி, கார்த்திகை, அமா-வாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில், பால மலைக்கு, நூற்றுக்க-ணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.ஆனால், பாலமலை பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால், பால மலைக்கு வரும் பக்தர்கள் மழை காலத்தி லும், வெயில் அதிகமாக அடிக்கும் போதும் அவதிப்படு-கின்றனர். இதனால், கோவிலின் அடிவார பகுதியில் உள்ள பால-மலை பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

