இஸ்ரேல், ஈரான் செல்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை
இஸ்ரேல், ஈரான் செல்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை
UPDATED : ஏப் 13, 2024 09:29 AM
ADDED : ஏப் 12, 2024 10:58 PM

புதுடெல்லி: இஸ்ரேல் மீது ஈரான் அடுத்த 48 மணிநேரத்திற்குள் தாக்குதல் நடத்தபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேல் மீது அடுத்த 48 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் ராணும் தயார் நிலையில் உள்ளதாகவும் ,தாக்குதல் துவங்கும் என கூறப்படுவதால், மறு அறிவிப்புவரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தியுள்ளார். அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

