யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கும் ஈரான்: ஐ.ஏ.இ.ஏ., குற்றச்சாட்டு
யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கும் ஈரான்: ஐ.ஏ.இ.ஏ., குற்றச்சாட்டு
UPDATED : மே 28, 2024 08:20 PM
ADDED : மே 28, 2024 08:16 PM

ஐ.நா: யுரேனியம் செறிவூட்டலை ஈரான் மேலும் அதிகரித்து வருவதாக சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் ஜெனரல் ரபேல் குரோஸி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் ரகசியமாக அதிகரித்து வருவதாகவும் இது சர்வதேச விதிகளுக்கு எதிரான செயல் எனவும் ஈரான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டலை கண்காணித்து வரும் அமைப்பான ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமை என்ற அமைப்பு ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ளது. இந்த அமைப்பின் இயக்குனர் ஜெனரல் ரபேல் குரோஸி அறிக்கை வாயிலாக கூறியுள்ளதாவது, ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை கடந்த பிப்ரவரியில் 20.06 கி.கி., இருந்த நிலையில் தற்போது 142.1கி.கி அளவுக்கு அதிகரித்துள்ளது. இது 60 சதவீத வரை உயர்ந்துள்ளது. ஈரானின் இந்த செயல் அணு ஆயுதம் தயாரிப்புக்கு நிகரானது . இவ்வாறு ஐ.ஏ.இ.ஏ. தெரிவித்துள்ளது.