sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான்- இஸ்ரேல் போர் : 15 மணி நேரம் சுற்றி புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஆஸி., விமானம்

/

ஈரான்- இஸ்ரேல் போர் : 15 மணி நேரம் சுற்றி புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஆஸி., விமானம்

ஈரான்- இஸ்ரேல் போர் : 15 மணி நேரம் சுற்றி புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஆஸி., விமானம்

ஈரான்- இஸ்ரேல் போர் : 15 மணி நேரம் சுற்றி புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஆஸி., விமானம்

4


UPDATED : ஜூன் 25, 2025 10:26 AM

ADDED : ஜூன் 24, 2025 05:41 PM

Google News

UPDATED : ஜூன் 25, 2025 10:26 AM ADDED : ஜூன் 24, 2025 05:41 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெர்த்: ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக, பாரிஸ் செல்லும் ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் விமானம், 15 மணி நேரம் வானில் சுற்றியபின், மீண்டும் புறப்பட்ட இடமான பெர்த்திற்கு திரும்பியது.

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான ஏர்லைன்ஸ் நிறுவனமான குவாண்டாஸ் போயிங் கோ.787 பாரிஸ் செல்ல திட்டமிடப்பட்டு, நேற்று உள்ளூர் நேரப்படி, இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு வானில் பறந்தது. ஆனால், ஈரான்-இஸ்ரேல் பதட்டத்தால் திட்டமிட்ட இலக்கை அடைய முடியாமல் புறப்பட்ட இடமான பெர்த்திற்கு மீண்டும் திரும்பியது.

இது குறித்து குவாண்டாஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இஸ்ரேல் -ஈரான் விவகாரத்தில் ஏவுகணைத் தாக்குதல் குறித்து விமான நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டபோது, போயிங் கோ.787 விமானம்,​​இந்திய வான்வெளியின் தென்மேற்கு எல்லை வரை சென்று கொண்டிருந்தது, மேலும் 15 மணி நேரமாக வானில் சுற்றிக்கொண்டே இருந்த நிலையில், விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று காலை 11 மணியளவில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான பெர்த்தில் தரையிறங்கியது.

அதேபோல, பெர்த்திலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்குச் சென்ற மற்றொரு விமானமும் பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. இந்த இரண்டு விமானங்களிலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us