ADDED : பிப் 28, 2026 03:47 PM

துபாய்: தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சவுதி, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தம் செய்ய ஈரான் முன்வர அமெரிக்கா வலியுறுத்துகிறது. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் சார்பில் இன்று ஈரான் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தாக்குதலை தொடங்கியுள்ளது.
அமெரிக்காவுடன் நட்பு கொண்டுள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது.
துபாய், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் மீது ஈரான் ராணுவத்தின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகள் விழுந்து வெடித்துள்ளன.
இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகள் முழுவதும் விமான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

