sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

/

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

2


UPDATED : ஜூன் 27, 2025 01:14 PM

ADDED : ஜூன் 27, 2025 07:35 AM

Google News

UPDATED : ஜூன் 27, 2025 01:14 PM ADDED : ஜூன் 27, 2025 07:35 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்க ஆரம்பம் முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்க மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உண்டானது.

ஈரானின் போர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. பின்னர், ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தாக்குதலில், ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

இந்த சூழலில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அடுத்த வாரம் ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இது குறித்து ஈரான் செய்தி சேனலுக்கு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாவது: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.

அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? இதனால் ஈரானுக்கு ஏதும் பலன் கிடைக்குமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் சேதம் அடைந்துள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுத திறனை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us