ADDED : மார் 13, 2026 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர, மூன்று முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
இது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய இந்த போரை முடிக்க மூன்று நிபந்தனைகள் உள்ளன. ஒன்று, ஈரானின் சட்டபூர்வ உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். இரண்டு, போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மூன்று, எதிர்காலத்தில் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கான உறுதியான சர்வதேச உத்தரவாதம் வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் போரை முடிக்க முடியும். பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதே ஈரானின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.

