அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் நிச்சயம் கடும் பதிலடி கொடுப்போம்; ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் நிச்சயம் கடும் பதிலடி கொடுப்போம்; ஈரான் எச்சரிக்கை
ADDED : ஜன 26, 2026 04:51 PM

டெஹ்ரான்: அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் நிச்சயம் கடும் பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், கிட்டத்தட்ட 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். ஈரானில் பொதுமக்கள் நடத்தி வரும் போராடடத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. போராட்டத்தை முடக்கக்கூடாது, மீறினால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
டிரம்பின் இத்தகைய அறிவிப்பை தொடர்ந்து, போர்க்கப்பல்கள், போர் விமானங்களை ஈரானை சுற்றியுள்ள இடங்களில் அமெரிக்கா நிலை நிறுத்தி உள்ளது. ஈரான் மீது எந்த நிமிடத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில் அந்நாட்டு ஆட்சியாளர் மதகுரு கமேனி பாதுகாப்பு கருதி சுரங்கத்திற்குள் பதுங்கி உள்ளார். அயதுல்லா அலி கமேனியின் மூன்றாவது மகன் மசூத் கமேனி, தனது தந்தையின் அலுவலகத்தின் அன்றாட நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
தயார்
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க, ஆயுதப்படைகள் முழு எச்சரிக்கையுடன் இருப்பதாக ஈரானின் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாஹ்ராம் இரானி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
ஆயுதப்படைகள் நாட்டைப் பாதுகாக்க முழு தயார் நிலையில் இருக்கிறது. எங்களது வீரர்கள் மிகவும் விழிப்புடன் உள்ளனர்.
எங்களது படை வலுவானது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் பதிலடி வழங்கப்படும். இவ்வாறு ரியர் அட்மிரல் ஷாஹ்ராம் இரானி கூறியுள்ளார்.

