sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாக்., - ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்

/

பாக்., - ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்

பாக்., - ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்

பாக்., - ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்

4


ADDED : நவ 10, 2025 05:51 AM

Google News

4

ADDED : நவ 10, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம் தெரிவித்து உ ள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், அதன் மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே, டி.டி.பி., எனப்படும் தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக மோதல் உள்ளது.

இந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாக ஆப்கன் மீது பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. இதை, ஆப்கானில் ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு மறுத்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றன.

போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக மூன்று கட்டங்களாக பேச்சு நடந்தும், எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்த பதற்றங்களை தீர்க்கவும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் சக முஸ்லிம் நாடு மற்றும் அண்டை நாடு என்கிற விதத்தில் பாகிஸ்தானுக்கு உதவ விரும்புவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் உடன், அரக்சி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us