sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சிரியாவில் ஈரான் தூதரகம் சூறையாடல்!

/

சிரியாவில் ஈரான் தூதரகம் சூறையாடல்!

சிரியாவில் ஈரான் தூதரகம் சூறையாடல்!

சிரியாவில் ஈரான் தூதரகம் சூறையாடல்!

7


UPDATED : டிச 08, 2024 10:30 PM

ADDED : டிச 08, 2024 06:27 PM

Google News

UPDATED : டிச 08, 2024 10:30 PM ADDED : டிச 08, 2024 06:27 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: சிரியாவில் இருந்து தப்பியோடிய அதிபர் பஷர் அல் ஆசாத்திற்கு நெருக்கமான நாடான ஈரானின் தூதரகம், டமாஸ்கஸ் நகரில் சூறையாடப்பட்டது.

சிரியாவை ஆட்சி செய்த பஷர் அல் ஆசாத், ஈரானுடன் நெருங்கிய உறவை கொண்டு இருந்தார். சிரியாவில் போராடிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் பெரிதும் உதவி வந்தது. இந்நிலையில், சிரியாவில் இருந்து பஷர் அல் ஆசாத் தப்பி ஓடியததைத் தொடர்ந்து ஈரான் மீது மக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் கோபம் திரும்பி உள்ளது.

பஷர் அல் ஆசாத் தப்பி ஓடியது தெரிந்ததும், டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரான் தூதரகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டு சூறையாடினர். கைகளில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் டிரக்கில் ஏற்றி கொண்டு சென்றனர். மேலும், அங்கு இருந்த ஈரானிய தலைவர்கள் மற்றும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் நஸ்ருல்லா புகைப்படங்களை கிழித்து எறிந்தனர்.






      Dinamalar
      Follow us