sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வளைகுடா நாடுகளின் வங்கிகள்,நிதி நிறுவனங்களை தாக்குவோம்; ஈரான் அறிவிப்பு

/

வளைகுடா நாடுகளின் வங்கிகள்,நிதி நிறுவனங்களை தாக்குவோம்; ஈரான் அறிவிப்பு

வளைகுடா நாடுகளின் வங்கிகள்,நிதி நிறுவனங்களை தாக்குவோம்; ஈரான் அறிவிப்பு

வளைகுடா நாடுகளின் வங்கிகள்,நிதி நிறுவனங்களை தாக்குவோம்; ஈரான் அறிவிப்பு

6


ADDED : மார் 11, 2026 07:47 PM

Google News

6

ADDED : மார் 11, 2026 07:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: வளைகுடாவில் உள்ள நாடுகளின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அறிவித்து இருக்கிறது.

ஈரானை எதிரான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் போர் 2வது வாரத்தை எட்டி உள்ளது. அமெரிக்காவின் தீவிர தாக்குதலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. டெஹ்ரானில் உள்ள வங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதன் எதிரொலியாக, அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்த வளைகுடா நாடுகளில் உள்ள வங்கிகள். நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. இது குறித்து ஈரான் ராணுவ கூட்டு தலைமையான கதம் அல் அன்பியாவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது;

ஈரான் தலைநகரில் உள்ள வங்கி மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இது சட்டவிரோதமானது, வழக்கத்திற்கு மாறானது. இதன் மூலம் ஈரான் படையினருக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சொந்தமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது குறி வைக்கும் உரிமையை அமெரிக்கா எங்களுக்கு அளித்து இருக்கிறது.

எங்களின் பதிலடி நடவடிக்கைக்காக அமெரிக்கா காத்திருக்க வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேலிய வங்கிகளை நடத்தும் நாடுகளில் உள்ள மக்கள், இந்த வங்கிகள் இருக்கும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வரவேண்டாம்.

இவ்வாறு ராணுவ கூட்டுத் தலைமை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us