sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்!

/

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்!

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்!

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்!

3


ADDED : ஜூலை 13, 2025 04:09 PM

Google News

3

ADDED : ஜூலை 13, 2025 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான் காயம் அடைந்தாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், இதனால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் எனக்கூறி கடந்த மாதம் அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ட்ரோன், ஏவுகணைகள் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடந்தது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் தலையீட்டால், இரு தரப்புக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது.







இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான், ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகேர், நீதித்துறை தலைவர் மோசெனி எஜெய் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஈரான் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது. இக்கூட்டம் நடந்த கட்டடத்தை குறிவைத்து, ஆறு ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது.







உடனடியாக ஆபத்து கால வழியாக அங்கிருந்த அனைவரும் வெளியேறினர். இருப்பினும், அதிபர் மசூத் ஜெஜஸ்கியான் உட்பட சிலர் காயமடைந்தனர் என ஈரான் புரட்சிகரப்படையுடன் தொடர்புடைய அமைப்பு தற்போது செய்தி வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







இஸ்ரேல் தன்னை கொல்ல சதி செய்வதாக மசூத் பெஜஸ்கியான் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us