ADDED : ஜன 27, 2026 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கின்ஷாசா: மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதி கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஐ.எஸ்., தொடர்புடைய ஏ.டி.எப்., எனப்படும் அல்லைட் டெமாக்ராடிக் போர்ஸ் மற்றும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிக்குழு உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து அப்பாவி மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இடுரி மாகாணம் அபகுலு கிராமத்தில், ஏ.டி.எப்., ஆயுதக்குழு நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 15 ஆண்கள் ஒரு வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

