sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்கா குறி வைத்த அதே அணுசக்தி நிலையம்: ஈரானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்

/

அமெரிக்கா குறி வைத்த அதே அணுசக்தி நிலையம்: ஈரானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்

அமெரிக்கா குறி வைத்த அதே அணுசக்தி நிலையம்: ஈரானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்

அமெரிக்கா குறி வைத்த அதே அணுசக்தி நிலையம்: ஈரானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்

1


ADDED : ஜூன் 23, 2025 05:25 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:25 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்; பங்கர் பஸ்டர் குண்டுகள் மூலம் அமெரிக்கா குறி வைத்த ஈரானின் அணுசக்தி நிலையம் மீது இஸ்ரேல் மீண்டும் பயங்கர தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறது.

ஈரான்-இஸ்ரேல் நாடுகள் இடையே நீடித்து வரும் போரில், அமெரிக்காவும் நுழைந்துள்ளது. தினமும் இருநாடுகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வரும் சூழலில், உயிரிழப்புகளும், சேதங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையமான போர்டோ மீது மீண்டும் இஸ்ரேல் அதிரடியாக தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இந்த அணுசக்தி நிலையமானது பூமிக்கடியில் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலை ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.

தாக்குதலின் போது ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பது பற்றிய எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. இந்த செறிவூட்டப்பட்ட அணுசக்தி நிலையம் மீது தான் சில நாட்கள் முன்பு அமெரிக்காவும் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது நினைவு இருக்கலாம்.

போர்டோ அணுசக்தி நிலையம் மட்டுமல்லாது, தலைநகரில் உள்ள பிரபல ஈவின் என்ற சிறைச்சாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதுதவிர, அங்குள்ள பாதுகாப்பு நிலைகளையும் குண்டுகள் வீசி தாக்கி இருக்கிறது.






      Dinamalar
      Follow us