sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அடுத்த கட்ட போர் விரைவில்... இஸ்ரேல் சொன்ன தகவல்; மேற்காசியாவில் அதிகரிக்கும் பதற்றம்

/

அடுத்த கட்ட போர் விரைவில்... இஸ்ரேல் சொன்ன தகவல்; மேற்காசியாவில் அதிகரிக்கும் பதற்றம்

அடுத்த கட்ட போர் விரைவில்... இஸ்ரேல் சொன்ன தகவல்; மேற்காசியாவில் அதிகரிக்கும் பதற்றம்

அடுத்த கட்ட போர் விரைவில்... இஸ்ரேல் சொன்ன தகவல்; மேற்காசியாவில் அதிகரிக்கும் பதற்றம்

20


ADDED : அக் 01, 2024 08:04 AM

Google News

ADDED : அக் 01, 2024 08:04 AM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ரூட்: ஹஸ்புல்லா மீதான அடுத்த கட்ட போர் விரைவில் துவங்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் கலன்ட் தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், அதற்கு ஆதரவாக லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதலை, இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருக்கும்படி, தன் வீரர்களை இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதற்கு வசதியாக லெபனான் தெற்கு எல்லையில் டாங்கிகள் குவிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், ' ஹஸ்புல்லா மீதான அடுத்த கட்ட போர் விரைவில் துவங்கும்' என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் கலன்ட் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் மேற்காசிய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

எச்சரிக்கை

இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ' இஸ்ரேலின் எதிரி ஈரான் அரசு தான். மக்கள் அல்ல. அரசாங்கம் வீழ்ச்சியடையும் போது, ​​​​அதன் மக்கள் சிறப்பாக இருப்பார்கள்' என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us