sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்; பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு

/

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்; பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்; பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்; பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு

15


UPDATED : ஆக 11, 2025 10:51 AM

ADDED : ஆக 11, 2025 10:05 AM

Google News

UPDATED : ஆக 11, 2025 10:51 AM ADDED : ஆக 11, 2025 10:05 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: காசா நகரில் உள்ள ஒரு பத்திரிகையாளர் கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது 2023ல் போர் துவங்கியது. காசாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, உள்ளது. இஸ்ரேல் தாக்குதல்களில் 61,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காசா நகரில் உள்ள ஒரு பத்திரிகையாளர் கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பிரபல நிருபர் அனஸ் அல்-ஷெரிப் உட்பட ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டனர். இஸ்ரேல் ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியதை உறுதிப்படுத்தியது.

அல்-ஷெரிப் ஒரு ஹமாஸ் செயல்பாட்டாளர் என்றும், அவர் ஒரு பத்திரிகையாளராகக் காட்டிக் கொண்டு ராக்கெட் தாக்குதல்களுக்குப் பொறுப்பான பயங்கரவாதக் குழுவை வழிநடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியது.

'ஹமாஸ் பயங்கரவாத அமைப்பில் ஒரு பயங்கரவாதப் பிரிவின் தலைவராக அனஸ் அல் ஷெரீப் பணியாற்றினார், மேலும் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு அவர் பொறுப்பேற்றார்' என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us