sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

போரை நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

/

போரை நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

போரை நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

போரை நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

29


ADDED : டிச 10, 2024 11:31 AM

Google News

ADDED : டிச 10, 2024 11:31 AM

29


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: 'போரை இப்போது நிறுத்த முடியாது. காசாவில் தாக்குதலை தொடர்வோம்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் ஒரு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதனால் இஸ்ரேலை சேர்ந்த 1,208 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் உயிரிழந்த நிலையில், இன்னும் 100 பேருக்கும் மேல் பிணைக்கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளனர்.

இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: நாங்கள் இப்போது போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் வந்து தாக்கலாம். இது நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. போரை இப்போது நிறுத்த முடியாது. காசாவில் தாக்குதலை தொடர்வோம். ஹமாஸ்-ஐ அழித்தொழித்தல் மற்றும் அதன் ராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை ஒழித்தல் என்ற இலக்கை நிர்ணயித்து உள்ளோம்.

இந்த இலக்கை நாங்கள் இன்னும் முழுமையாக அடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் நடைபெற்றும் வரும் நிலையில், போரை நிறுத்த மாட்டேன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us