அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, ஒரு லிட்டர் எண்ணெய் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்காக செல்லும் எந்தக் கப்பலும், சட்டப்பூர்வ இலக்கு தான். பிராந்திய பாதுகாப்பை நீங்கள் சீர்குலைத்துள்ளீர்கள். கச்சா எண்ணெ ய் விலை, ஒரு பேரல், 200 டாலராக உயர்வதை தாங்கிக் கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும். இப்ராஹிம் ஜோல்பகாரி செய்தித் தொடர்பாளர், ஈரான் ராணுவம்.
இந்திய
@subboxhd@மாலுமி பலி!
கச்சா எண்ணெய் டேங்கர்களுடன் சென்ற அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஈரான் படையினர் நிகழ்த்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவுக்கு சொந்தமான, மார்ஷல் தீவு கொடியுடன் சென்ற 'சேப் ஷீ விஷ்ணு' என்ற சரக்கு கப்பல், ஈராக்கின் பஸ்ரா அருகே பெர்சியன் வளை குடாவில் தாக்கப் பட்டது. நீருக்கடியில் செல்லும் ட்ரோன் மூலம் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. மால்டா கொடியுடன் சென்ற மற்றொரு கப்பல் 'செபிரோஜ்' என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

