sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பணியாளருக்கு சித்திரவதை: ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: ஸ்விஸ் நீதிமன்றம் அதிரடி

/

பணியாளருக்கு சித்திரவதை: ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: ஸ்விஸ் நீதிமன்றம் அதிரடி

பணியாளருக்கு சித்திரவதை: ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: ஸ்விஸ் நீதிமன்றம் அதிரடி

பணியாளருக்கு சித்திரவதை: ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: ஸ்விஸ் நீதிமன்றம் அதிரடி

7


UPDATED : ஜூன் 22, 2024 01:45 PM

ADDED : ஜூன் 22, 2024 11:05 AM

Google News

UPDATED : ஜூன் 22, 2024 01:45 PM ADDED : ஜூன் 22, 2024 11:05 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெனிவா: வீட்டு பணியாளர்களை சித்ரவதை செய்த வழக்கில், ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு ஸ்வீஸ் நீதிமன்றம், சிறை தண்டனை வழங்கி உள்ளது. இருவருக்கு 4.6 ஆண்டும், மற்ற இருவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கியது.

குற்றச்சாட்டு

பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியான கோபிசந்த் ஹிந்துஜா, வங்கி, எண்ணெய், வர்த்தகம் உட்பட பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவரின் சகோதரர்களில் ஒருவரான பிரகாஷ், ஹிந்துஜா குழுமத்தின் பல்வேறு பணிகளை கவனித்து வருகிறார்.

ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் சொகுசு மாளிகை உள்ளது. இங்கு பணியாற்றிய இந்திய பணியாளர்களை பிரகாஷ் ஹிந்துஜா (78), அவரின் மனைவி கமல் ஹிந்துஜா (75), மகன் அஜய், மருமகள் நம்ரதா ஆகியோர் கொத்தடிமை போல் நடத்தியதாகவும், அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததுடன், குறைந்த சம்பளம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதுவும் ஸ்வீஸ் நாணயத்தில் வழங்காமல், இந்திய ரூபாயில் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்க்க கட்டாயபடுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தண்டனை

இது தொடர்பான வழக்கு ஜெனிவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையில், ஆட்கடத்தல் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்திய பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கில், அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன், பிரகாஷ் மற்றும் கமல் ஹிந்துஜாவுக்கு தலா 4.6 ஆண்டு சிறை தண்டனையும், அஜய் மற்றும் நம்ரதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட போது இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஹிந்துஜா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us