sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆஸ்திரேலியாவில் 4வது துாதரகம் பிரிஸ்பேனில் திறந்தார் ஜெய்சங்கர்

/

ஆஸ்திரேலியாவில் 4வது துாதரகம் பிரிஸ்பேனில் திறந்தார் ஜெய்சங்கர்

ஆஸ்திரேலியாவில் 4வது துாதரகம் பிரிஸ்பேனில் திறந்தார் ஜெய்சங்கர்

ஆஸ்திரேலியாவில் 4வது துாதரகம் பிரிஸ்பேனில் திறந்தார் ஜெய்சங்கர்


ADDED : நவ 05, 2024 02:12 AM

Google News

ADDED : நவ 05, 2024 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரிஸ்பேன்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், நான்காவது இந்திய துணை துாதரகத்தை நேற்று நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்குள்ள பிரிஸ்பன் நகரில், இந்திய துணை துாதரகத்தை நேற்று திறந்து வைத்தார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், பெர்த் நகரங்களில் இந்திய துாதரகங்கள் உள்ளன. அந்த வரிசையில், நான்காவதாக பிரிஸ்பேன் நகரில் துாதரகம் நேற்று திறக்கப்பட்டது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 'பிரிஸ்பனில் இந்திய துணை துாதரகம் திறந்ததில் மகிழ்ச்சி.

இது குயின்ஸ்லாந்து மாகாணத்துடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்த உதவும். வர்த்தகத்தை ஊக்குவிப்பதுடன், கல்வி தொடர்புகளை விரைவுபடுத்த உதவும்' என, குறிப்பிட்டு உள்ளார்.

பிரிஸ்பேனின் பார்க்லாண்ட் பகுதியில் உள்ள ரோமா தெருவில் வைக்கப்பட்டுள்ள மஹாத்மா காந்தி சிலைக்கு ஜெய்சங்கர் மரியாதை செய்தார். பின் குயின்ஸ்லாந்து கவர்னர் ஜெனெட் யங்கை சந்தித்து பேசினார்.

இந்த பயணத்தின் போது, கான்பராவில் நடக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் 15வது கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். அப்போது, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கை அவர் சந்தித்து பேசுவார்.

ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் செல்லும் ஜெய்சங்கர், ஆசியான் இந்தியாவின் சிந்தனை குழுவின் 8வது வட்ட மேசை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

வளர்ச்சி பட்டியல்

ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்தியாவின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 28 கி.மீ., நெடுஞ்சாலைகளும், 12 - 14 கி.மீ., ரயில் வழித் தடங்களும் அமைக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில் சேவைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன், ஆறு நகரங்களில் மட்டுமே இருந்த மெட்ரோ ரயில் சேவை, தற்போது 21 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 39 மெட்ரோ திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. ஆண்டுக்கு புதிதாக 75 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்த இந்தியாவில், தற்போது 150 விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வளர்ச்சிப் பணிகளில் இருந்தே இந்தியாவின் இன்றைய நிலை குறித்து நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us