sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தோல்வியை ஒப்புக் கொண்டார் கமலா ஹாரிஸ்; தொடர்ந்து போராட உறுதி

/

தோல்வியை ஒப்புக் கொண்டார் கமலா ஹாரிஸ்; தொடர்ந்து போராட உறுதி

தோல்வியை ஒப்புக் கொண்டார் கமலா ஹாரிஸ்; தொடர்ந்து போராட உறுதி

தோல்வியை ஒப்புக் கொண்டார் கமலா ஹாரிஸ்; தொடர்ந்து போராட உறுதி

13


UPDATED : நவ 07, 2024 07:55 AM

ADDED : நவ 07, 2024 06:49 AM

Google News

UPDATED : நவ 07, 2024 07:55 AM ADDED : நவ 07, 2024 06:49 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், தன் போராட்டம் தொடரும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் அறிவித்தார்.

அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான, இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர். தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

இது தொடர்பாக, வாஷிங்டனில் உள்ள ஹோவர்ட் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேசியதாவது:

* அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்கிறேன்.

* பெண்களின் உரிமைகளுக்காகவும், துப்பாக்கி வன்முறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன்.

* அமைதியான முறையில் அதிகார பகிர்வை டொனால்டு டிரம்ப் கையாள வேண்டும்.

* சில நேரங்களில் நாம் சண்டையிடும் போது, வெற்றி பெற சிறிது நேரம் ஆகும்.

* ஆனால் நாம் வெற்றி பெற மாட்டோம் என்று அர்த்தம் இல்லை. இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.

ஒளி வீசும் நட்சத்திரங்களாக இருப்போம்!

சமூகவலைதளத்தில் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள பதிவில்,' நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை, நாட்டின் மீது காட்டிய நேசம், மன உறுதி ஆகியவற்றுக்கு என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் முடிவானது, நாம் விரும்பாத ஒன்றாக இருக்கலாம்; நமது போராட்டம் பலனின்றி போயிருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் நம்பிக்கை ஒளி எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.
இருளாக இருக்கும் போது தான் நட்சத்திரங்களை காண முடியும் என்று கூறுவார்கள். நாம் இப்போது ஒரு இருண்ட காலத்துக்கு செல்கிறோம் என்று பலரும் வருத்தப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி நடக்காது என்று நான் நம்புகிறேன். ஒருவேளை அப்படி இருந்தால், பிரகாசமாக ஒளி வீசும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களாக இருந்து வானத்தை ஒளிரச் செய்வோம். தோல்வி அடைந்திருக்கும் இந்த நேரத்தில், உண்மையும் நம்பிக்கையும் நமக்கு வழிகாட்டும் என்று நம்புவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us