sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 30, 2025 ,கார்த்திகை 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்; அடைக்கலம் கொடுப்பதை ஒப்புக்கொண்டார் பிரதமர் ட்ரூடோ!

/

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்; அடைக்கலம் கொடுப்பதை ஒப்புக்கொண்டார் பிரதமர் ட்ரூடோ!

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்; அடைக்கலம் கொடுப்பதை ஒப்புக்கொண்டார் பிரதமர் ட்ரூடோ!

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்; அடைக்கலம் கொடுப்பதை ஒப்புக்கொண்டார் பிரதமர் ட்ரூடோ!

20


ADDED : நவ 09, 2024 07:37 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:37 AM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: 'கனடாவில் காலிஸ்தானியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை' என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கனடா அரசு, இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

'காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாக கனடா அரசு செயல்பட்டு வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தானியர்கள் மிரட்டல் விடுப்பதை கனடா அரசு வேடிக்கை பார்க்கிறது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், ஒட்டாவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டு மொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. கனடாவில் மோடி அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் உள்ளனர்.

ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த ஹிந்து கனேடியர்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ பேசினார். கனடாவில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் இருப்பதை ட்ரூடோ ஒப்புக்கொண்டார். கனடா அரசாங்கம் காலிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துவதாக உள்ளது.






      Dinamalar
      Follow us