sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா; இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை

/

வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா; இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை

வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா; இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை

வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா; இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை

2


ADDED : ஜன 31, 2025 02:23 PM

Google News

ADDED : ஜன 31, 2025 02:23 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலாலம்பூர்: மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பார்னேவில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக, குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள ஏற்பட்டுள்ளன. நேற்று வரையில் இந்த கனமழையில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு மையம் அமைந்திருக்கும் சாபா மற்றும் சரவாக் பகுதிகளில் மட்டும் 700 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக அரசு கொடுத்த தரவுகளில் தெரிய வந்துள்ளது. அதேபோல, அண்மையில் பின்டுலுவில் 48 மணிநேரத்தில் 800 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும், இன்று வரையில் இந்த கனமழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது அந்நாட்டு மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.






      Dinamalar
      Follow us