sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

விமான முன்பதிவு ரத்து:கார்களை திருடி வீடு திரும்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

/

விமான முன்பதிவு ரத்து:கார்களை திருடி வீடு திரும்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

விமான முன்பதிவு ரத்து:கார்களை திருடி வீடு திரும்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

விமான முன்பதிவு ரத்து:கார்களை திருடி வீடு திரும்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

1


ADDED : ஜூன் 30, 2025 07:25 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 07:25 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்: சீனாவில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, கார்களை திருடி தனது வீட்டிற்கு சென்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரல் ஆனதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென், கடந்த மே.31 ஆம் தேதி தனது ஊருக்கு செல்வதற்காக, விமானத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்தார். விமான பயண கட்டணம் ரூ.18 ஆயிரம் என்ற நிலையில், டிக்கெட்டை ரத்து செய்தார். சென்னுக்கு வினோதமாக சிந்தனை தோன்றியது. கார்களை திருடி, தனது வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்து, ஹூனான் மாகாணம் சாங்ஷாவில் தனியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது பூட்டப்படாத கார் மற்றும் கார் பார்க்கிங்களில் குறிவைத்து கார் சாவிகளை திருடியும், சீனாவின் 7 நகரங்கள் வழியாக தனது வீட்டிற்கு செல்லும் வழியில் பெட்ரோல் இல்லாமல் கார் நின்றுவிட்டால், வேறு ஒரு காரை திருடி செல்வது, இப்படியே ரூ.1.16 கோடி மதிப்பிலான 8 கார்களை திருடி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி மத்திய சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஷோரூமில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், வாகனம் மற்றும் கார் சாவியைக் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து போலீசுக்கு புகார் அளித்தார்.

அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள், கார் சென்ற பாதையை பின் தொடர்ந்தனர். கார் வுகானை விட்டு வடக்கு நோக்கி சென்றதை போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்தனர். அதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஹெபே மாகாணத்தில் சென் செய்த திருட்டுகளில் ஒன்றின் போது, ​​கார் உரிமையாளரை காயப்படுத்தினார், ஆனால் பீதியில் அங்கிருந்து தப்பிச் சென்றார். சென்,திருடப்பட்ட காருக்குள் தூங்கிக் கொண்டிருந்ததால், ஜூன் 4 ஆம் தேதி ஹெபே கார் பார்க்கிங்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் திருடப்பட்ட 8 கார்களை மீட்டனர். போலீஸ் காவலில் உள்ள சென்னுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் கோர்ட் விதித்தது. கைதான சென், போலீஸ் காவலில் உள்ளார்.

இந்த செய்தி சமூகஊடகங்களில் வைரல் ஆனது. விமானம் பயண டிக்கெட்டை வாங்க முடியாவிட்டால் ஏன் பயணம் செய்ய வேண்டும் என்றும், உறுதிப்பாடு உள்ள அவர் தனது திறமையை சரியாக பயன்படுத்தி இருந்தால் ஏதாவது சாதித்து இருக்கலாம். தற்போது எல்லாம் வீணாகி விட்டது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us