ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்த பிரதமர் மோடி: போட்டோக்கள் வைரல்!
ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்த பிரதமர் மோடி: போட்டோக்கள் வைரல்!
ADDED : ஆக 30, 2025 10:19 AM

டோக்கியோ: ஜப்பானில் பிரதமர் மோடி புல்லட் ரயிலில் பயணித்தார். அவருடன் அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவும் சென்றார்.
2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்றிருக்கிறார். அங்கு இரு நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். டோக்கியோவில் 16 மாகாண கவர்னர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந் நிலையில், புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவும் பயணித்தார். இந்த பயண விவரத்தை பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதேபோன்று, ஷிகெரு இஷிபாவும் பிரதமர் மோடியுடனான பயணத்தை புகைப்படங்களாக தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய பிரதமர் மோடியுடன் புல்லட் ரயில் பயணம் தொடங்கி இருக்கிறது. சென்டைக்கு புறப்பட்டு உள்ளேன். இருவரும் ஒரே பெட்டியில் பயணிக்கிறோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
சென்டை வந்த பிரதமர் மோடிக்கு ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜப்பான் ரயில்வேயில் பயிற்சி பெற்று வரும் இந்திய ரயில் ஓட்டுநர்களை சந்தித்து பேசினார்.
ஜப்பான் பயணத்தை முடித்த பின்னர், பிரதமர் மோடி இன்று (ஆக.30) சீனா செல்கிறார். அங்கு 2 நாள் பயணம் மேற்கொள்கிறார்.