sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

எவரெஸ்ட் சிகரத்தில் இனி தனியாக ஏற முடியாது: நேபாள அரசு புதிய முடிவு

/

எவரெஸ்ட் சிகரத்தில் இனி தனியாக ஏற முடியாது: நேபாள அரசு புதிய முடிவு

எவரெஸ்ட் சிகரத்தில் இனி தனியாக ஏற முடியாது: நேபாள அரசு புதிய முடிவு

எவரெஸ்ட் சிகரத்தில் இனி தனியாக ஏற முடியாது: நேபாள அரசு புதிய முடிவு


ADDED : பிப் 05, 2025 08:43 PM

Google News

ADDED : பிப் 05, 2025 08:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரம் மற்றும் 8000 மீட்டர் உயரமுள்ள பிற சிகரங்களில் தனி மலையேற்றப் பயணங்களை நிறுத்த நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

எவரெஸ்ட் மலையேற்ற பயணங்களுக்கு, திருத்தப்பட்ட மலையேற்ற விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவருக்கு ஒரு மலை வழிகாட்டி உடன் வருவது கட்டாயம் ஆகும். இதன் மூலம், எவரெஸ்ட் சிகரம் மற்றும் 8,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட பிற மலை சிகரங்களில் தனி மலையேற்றப் பயணங்களை நேபாள அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

இது நேபாள அரசு மேற்கொண்ட மலையற்ற பயண ஒழுங்குமுறைக்கான ஆறாவது திருத்தம் ஆகும். இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

எவரெஸ்ட் சிகர பயண விதிமுறைகள்:

இனி தனியாக எவரெஸ்ட் மலையேற்றப் பயணங்கள் இல்லை

.

எவரெஸ்ட் உட்பட, 8,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட சிகரங்களுக்கு, ஒவ்வொரு இரண்டு ஏறுபவர்களுக்கும் ஒரு உயர ஆதரவு ஊழியர்கள் அல்லது மலை வழிகாட்டி நியமிக்கப்படுவார்கள்.

மற்ற மலைகளின் பயணங்களுக்கு, ஒரு குழுவிற்கு குறைந்தது ஒரு வழிகாட்டியாவது தேவை.

சுற்றுலாத் துறையின் இயக்குனர் ஆரத்தி நியூபேன் கூறியதாவது:

மலையில் ஏறுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டிகளை கட்டாயமாக்கியுள்ளது. மலை ஏறுதலுடன் தொடர்புடைய ஆபத்தைக் குறைக்க இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us