sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது புதிய வழக்கு

/

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது புதிய வழக்கு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது புதிய வழக்கு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது புதிய வழக்கு

1


ADDED : ஜூலை 11, 2025 12:48 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 12:48 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா:மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சரின் பெயர்களை அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் இணைத்துள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.

புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து, அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம், 1971ல் வங்கதேச போருக்கு பின் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானால் துவங்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை விசாரிக்க துவங்கப்பட்ட இந்த அமைப்பு, பின் செயலிழந்தது.

அதை முன்னாள் பிரதமரும், முஜிபுர் ரஹ்மான் மகளுமான ஷேக் ஹசீனா, 2010ல் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். தற்போது இந்த தீர்ப்பாயம் ஷேக் ஹசீனா வழக்குகளை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.

இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி., ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்துள்ளது.

இதன் விசாரணை முடிந்ததும் அதற்கான தண்டனை அறிவிக்கப்படும்.






      Dinamalar
      Follow us