sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

எச்1பி விசாவில் அடுத்த மாற்றம்

/

எச்1பி விசாவில் அடுத்த மாற்றம்

எச்1பி விசாவில் அடுத்த மாற்றம்

எச்1பி விசாவில் அடுத்த மாற்றம்

1


ADDED : செப் 24, 2025 09:04 AM

Google News

ADDED : செப் 24, 2025 09:04 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் எச்1பி விசாவில் மேலும் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வழங்கப்படுகிறது, எச்1பி விசா. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

சமீபத்தில் இந்த விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்நிலையில், அமெரிக்க அரசு புதிய உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.

அதன்படி, எச்1பி விண்ணப்பத்தை தேர்வு செய்யும் தற்போதைய லாட்டரி முறையை மொத்தமாக கைவிட்டு, திறமை மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் விசாக்களை வினியோகிக்கும் புதிய தேர்வு முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய தேர்வு முறை மூலம், விண்ணப்பங்களின் எண்ணிக்கை, நிர்ணயிக்கப்பட்ட 85,000ஐ தாண்டும் போது, அதிகப்படியான ஊதியம் செலுத்தும் நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதன் மூலம் அதீத திறமை கொண்டவர்கள் மற்றும் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.






      Dinamalar
      Follow us