உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 16, 2026 02:29 AM

அ நிறம் | அளவு
ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷி யா, மலேஷியா மற்றும் சிங்கப்பூர் இடையே அமைந்துள்ள மலாக்கா ஜலசந்தி, உலகின் மிக பரபரப்பான கடல் போக்குவரத்து பாதையாகும். இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் இந்த ஜலசந்தி வழியாக, உலக கடல் வர்த்தகத்தில், 30 சதவீதம் நடக்கிறது.
சீனாவின் எரிசக்தி இறக்குமதியில், 80 சதவீதம் இதன் வழியாகவே நடக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கியுள்ளதால், தற்போது அமெரிக்காவின் கவனம் மலாக்கா ஜலசந்தியை நோக்கி திரும்பியுள்ளது.
இந்தோனேஷியாவுடன் சமீபத்தில் அமெரிக்கா புதிய ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, அந்நாட்டு வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்களுக்கு கூடுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
