ADDED : ஜூன் 03, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுஜா : மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, வறட்சி, கனமழை என காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது கடுமையான பாதிப்புகளைசந்தித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக அந்த நாட்டில் கனமழை பெய்தது. இதில், நைஜர் மாகாணத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் சிக்கி, 151 பேர் உயிரிழந்த நிலையில், இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்ந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.