sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நம் அறிக்கைகளை யாரும் படிக்கவில்லை: ஐ.நா., ஆதங்கம்

/

நம் அறிக்கைகளை யாரும் படிக்கவில்லை: ஐ.நா., ஆதங்கம்

நம் அறிக்கைகளை யாரும் படிக்கவில்லை: ஐ.நா., ஆதங்கம்

நம் அறிக்கைகளை யாரும் படிக்கவில்லை: ஐ.நா., ஆதங்கம்


ADDED : ஆக 05, 2025 11:43 AM

Google News

ADDED : ஆக 05, 2025 11:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: உலக நாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், செலவுகளை குறைப்பதற்கும் வழிகளைத் தரும் வகையில் தயாரிக்கப்படும் ஐ.நா., சபையின் அறிக்கைகள் அதிகம் படிக்கப்படுவதில்லை என்று, அந்த சபை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் அனடோனியோ குட்டரெஸ், சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஐ.நா., சபை, 240 அமை ப்புகளை உள்ளடக்கிய 27,000 கூட்டங்களை கடந்த ஆண்டு நடத்தியது. இது தொடர்பாக, 1,100 அறிக்கைகள் வெளியிட்டப்பட்டன. ஆனால், இந்த அறிக்கைகள் பரவலாக படிக்கப்படவில்லை.

ஐ.நா., பொதுச்சபை அல்லது பாதுகாப்பு கவுன்சில் போன்ற அமைப்புகளால் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான அறிக்கைகளை, ஊழியர்கள் தீவிர கவனம் செலுத்தி தயாரிக்கின்றனர்.

இதில், 5 சதவீத அறிக்கைகள் மட்டுமே அதிகபட்சமாக 5,500 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளன.

அதேநேரம், 20 சதவீத அறிக்கைகள் 1,000 முறை கூட பதிவிறக்கம் செய்யப்படவில்லை. இனி குறைந்த எண்ணிக்கையில் கூட்டங்கள் நடத்தி, தரமான அறிக்கைகளை வெளியிடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us