sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

உக்ரைன் போர்க்களத்தில் வட கொரிய வீரர்கள்; ஒப்புக்கொண்டது ரஷ்யா!

/

உக்ரைன் போர்க்களத்தில் வட கொரிய வீரர்கள்; ஒப்புக்கொண்டது ரஷ்யா!

உக்ரைன் போர்க்களத்தில் வட கொரிய வீரர்கள்; ஒப்புக்கொண்டது ரஷ்யா!

உக்ரைன் போர்க்களத்தில் வட கொரிய வீரர்கள்; ஒப்புக்கொண்டது ரஷ்யா!

1


ADDED : ஏப் 28, 2025 07:34 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: ரஷ்யா முதன்முறையாக உக்ரைன் போரில் வட கொரியா படை வீரர்கள் பங்கேற்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா, அந்நாட்டின் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த போரில் ரஷ்ய ராணுவம் சார்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ரஷ்யா வட கொரியாவை சேர்ந்தவர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது என அண்மையில் ஜெலன்ஸ்கி புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஷ்யா முதன்முறையாக உக்ரைன் போரில் வட கொரியா படை வீரர்கள் பங்கேற்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் தலைமை ராணுவ கண்காணிப்பாளர் வலேரி ஜெராசிமோவ் கூறியதாவது: வட கொரிய படை வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்துப் போராடியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் புடின் மற்றும் கிம் ஜாங் உன் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பின்னர் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். போரில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறிய குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளது.






      Dinamalar
      Follow us