பஹல்காம் தாக்குதல்: பாக்.கிற்கு எதிராக வெளிநாடுகளில் போராட்டம்
பஹல்காம் தாக்குதல்: பாக்.கிற்கு எதிராக வெளிநாடுகளில் போராட்டம்
UPDATED : ஏப் 26, 2025 10:29 PM
ADDED : ஏப் 26, 2025 10:28 PM

காத்மண்டு: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நேபாளம், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனில் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.
காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பகுதியில் கடந்த22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் நேபாளத்தை சேர்ந்தவர். இந்த சம்பவம் நாடு முழுதும் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானை கண்டித்து உலகின் பல நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது.